Thursday, June 30, 2011

முத்திரைகள்

           முத்திரை என்பது பொருளைக் குறிப்பதற்காக விரல்களால் குறிக்கப்படும் அமைப்பு. அதாவது ஒரு பொருளில் தோற்றம், உருவம், குறி என்பவற்றைக் கைகளினால் விளக்குவதே முத்திரையாகும். இம்முத்திரைகளின் பயன்பாடு நடனத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. இதனால் இம்முத்திரைகள் "ஹஸ்தாபிநயம்" என்று அழைக்கப்படுகின்றது. பாரத முனிவர் காலத்த்ற்கு முன்னாலேயே இக்கலை நன்கு வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். வார்த்தைகள் எதுவும் பேசாமலே கைகளிலுள்ள விரல்களின் பல்வேறு நிலைகளாலும், அசைவுகளாலும் பொருள்பட அபிநயிப்பது இக்கலையாகும். நடனத்தில் பிரயோகிக்கும் கைகளை சமஸ்கிருதத்தில் ஹஸ்தங்கள் என்று அழைப்பர். தமிழில் "முத்திரைகள்" என்று அழைக்கப்படும். இவ் ஹஸ்தங்களை இரண்டாகப் பாகுபாடு செய்யலாம். 
அவையாவன 
  1. அபிநய ஹஸ்தம்.
  2. நிருத்த ஹஸ்தம்.
இவ் அபிநய ஹஸ்தம் மேலும் இரண்டாகப் பாகுபாடு செய்யலாம்.
  1. ஒற்றைக்கை அல்லது அஸம்யுத ஹஸ்தம்.
  2. இரட்டைக்கை அல்லது ஸம்யுத ஹஸ்தம்.
           இவற்றை முறையே இணைந்த கை, இணையாத கை எனவும் கூறலாம். அபிநயக்கைகள் கருத்துக்களைப் புலப்படுத்தவும் நிருத்தக் கைகள் நிருத்தத்திற்கும் பயன்படும். பாரத சாஸ்திரம் ஹஸ்தங்கள் பற்றி கூறும் போது    
அஸம்யுத ஹஸ்தங்கள் இருபத்து எட்டு  எனவும்,  ஸம்யுத ஹஸ்தங்கள் இருபத்து நான்கு எனவும் கூறுகிறது. முத்திரைகளின் உபயோகமே விநியோகங்களாகும். 

No comments:

Post a Comment