Saturday, June 11, 2011

உலகியல் வரலாறு

            ஆதியில் மனிதன் பூமியில் ஜனனித்ததும் அவனுக்கு ஞானம் உண்டாகவில்லை. அவனும் மற்ற மிருகங்கள் போல் தன் சந்தோசத்தையோ கஷ்டத்தையோ வெளிக்காட்ட கத்திக்கொண்டும், உறுமிக்கொண்டும் பலவிதமாக சத்தமிட்டுக் கொண்டிருந்தான். படிப்படியாக அந்த சத்தத்திலிருந்து பாஷையை உருவாக்கிக் கொண்டான். 

            மனிதனுக்கு சந்தோஷம் வந்தால் சிரிப்பதும், கூத்தாடுவதும், கோபம் மிகுந்தால் பரபரப்புடன் பேசுவதும் இயற்கை. சந்தோஷ மிகுதியால் மனிதன் கூச்சலிட்டான், குதித்துக் கூத்தாடினான். கைகளை கூத்திற்குச் சரியாகக் கொட்டினான். அவன் கூச்சலிட்டது இசையாகவும், கைகளைக் கொட்டியது தாளமாகவும் மாறியது. இசை, கூத்து, தாளம் இம்மூன்றையும் மனிதன் தன்னையறியாமலே கண்டுபிடித்துவிட்டான்.    

No comments:

Post a Comment