Tuesday, June 28, 2011

தில்லானா

            ஒரு சம்பிரதாய நடனக் கச்சேரியில் நிருத்த உருப்படிகளில் இறுதியாக ஆடப்படும் உருப்படி தில்லானாவாகும். அதாவது மங்களத்தின் முன் ஆடப்படும். இத்திள்ளான நாத்துருதீம், தனதிரனா, தம், தத்தீம் போன்ற சொற்கட்டுக்களை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட உருப்படியாகும். இது மத்திம காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இசை, நடனம் ஆகிய இரண்டு கச்சேரிகளுக்கும் இது பொதுவானதாகும். இதன் அங்கங்கள் பல்லவி, அனுபல்லவி என்பவற்றைக் கொண்டிருக்கும். சில தில்லானாக்கள் பல்லவி, சரணம் என்பவற்றைக் கொண்டிருக்கும். சரணத்தில் இரண்டுவகை சாகித்தியம் காணப்படும். பாடும் பொது இதன் பல்லவியினை பலமுறை பாடுவார். இதற்க்கு தாள வின்யாஸ  முறையில் பலவிதமான அடவு ஜாதிகள் கோர்வைகளாக ஆடப்படும்.

            தில்லானாவின் மூலம் நடனமாடுபவரின் தாள, லய ஞானத்தினை அறிந்து கொள்ளமுடிகின்றது. இத்தில்லானாவை "திரிதில்லானா" எனவும் அழைப்பார். இதன் தாது விறுவிறுப்புடன் காணப்படும். தில்லானா என்னும் உருப்படியை உருவாக்கியவர் மகா வைத்தியநாத ஐயர், மைசூர் சதாசிவராவ், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், சுவாதித்திருநாள் என்போர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.   

No comments:

Post a Comment