பரதநாட்டிய நிகழ்ச்சியில் சப்தத்தைத் தொடர்ந்துவரும் நிகழ்ச்சியாக வர்ணம் அமைந்துள்ளது. ஒரு நாட்டிய நிகழ்ச்சியின் சிகரமாக விளங்கும் வர்ணமானது இசைக்கும் நடனத்துக்கும் பொதுவானதாகும். பாட்டிற்குரியவகையில் தானவர்ணம் என்றும், பரதத்துக்குரிய வகையில் பதவர்ணம் என்றும் அழைப்பர். வர்ணம் பூர்வாங்கம், உத்தராங்கம் எனும் இரு பிரிவுகளை உடையது. பூர்வாங்கம் என்பது பல்லவி, அனுபல்லவி, முத்தாயீஸ்வரம் என்ற சிரமத்தைக் கொண்டுள்ளது. உத்தராங்கம் என்பது சரணம்,சரணஸ்வரங்கள் என்பவற்றைக் கொண்டிருக்கும். சரணத்திற்கு எத்துக் கடைப்பல்லவி என்றும் உபபல்லவி என்றும் வேறு பெயர் உண்டு.
வர்ணங்களில் ஆடலிற்காக அமைந்தவை தமிழிலும், தெலுங்கிலும் அதிகமாக இருக்கின்றன. அதிகமாக கையாளப்படும் வர்ணங்களில் சில.......
- காமிகி சரிவெரோ :- சங்கராபரணம்.
- மனவி செயசொனராதா :- சங்கராபரணம்.
- மோஹமான :-பைரவி.
- ஏமகுவ :- தன்பாசி.
- தானிகே :- தோடி.
No comments:
Post a Comment