யதோ ஹஸ்த ஸ்ததோ த்ருஷ்டிஹி
யதோ த்ருஷ்டிஹி ஸ்ததோ மனக
யதோ மனக ஸ்ததோ பாவஹ
யதோ பாவஹ ஸ்ததோ ரஸஹ
கருத்து :
கைகள் அசையுமிடத்து கண்கள் சேர வேண்டும். கண்கள் சேருமிடத்து மனம் சேர வேண்டும். மனம் சேருமிடத்து பாவம் சேர வேண்டும். பாவம் சேருமிடத்து ரஸம் உண்டாக வேண்டும்.
ஆஸ்யே நாலம் பயே கீதம்
ஹஸ்தே நார்த்தம் ப்ரதர்ஷே
ஷக்ஷீர்ப்யாம் தஷே பாவ
பாதப்யாம் தாளம் ஆதிஷே
கருத்து :
நாட்டியப் பெண் பாடத் தெரிந்தவளாக இருக்க வேண்டும். கருத்தைக் கைகளினால் வெளிப்படுத்த வேண்டும். இரு கண்களினாலும் பாவத்தை வெளிப்படுத்த வேண்டும். இரு கால்களினாலும் தாளப் பிரமாணத்தைக் காட்ட வேண்டும்.
No comments:
Post a Comment