Monday, July 18, 2011

கோர்வை

         பல அடவுகளின் சேர்க்கை கோர்வை எனப்படும். நாட்டியத்தில் வெவ்வேறு அமைப்புக்களைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தாளத்தில் அமைய சீரான சொற்கட்டுக்களைக் கோர்வைகளைக் கொண்ட மாலை கோர்வை எனப்படும். இது அங்ககாரம் அல்லது தொடுக்கப்பட்ட மாலை என அழைக்கப்படும். மாலையான இந்த கோர்வையானது ஒழுங்குமுறையில் அழகாக தொடுக்கப்பட்டுள்ளது. மண்டலங்கள், முத்திரைகள், பாதபேதங்கள் இங்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. பாடலின் கதிக்கேற்ப இக்கோர்வை அமைக்கப்பட்டு படிப்படியாக துரித லயத்தில் முடிவடையலாம். இக்கோர்வைகள் வன்மையும், மென்மையும் ஆன ஹஸ்த, பாத அசைவுகள் கலந்த அல்லது மாறி மாறித் தொடுக்கப்படும் ஒரு சிறு தீர்மானத்தில் முத்தாயிக்கப்பட்டு ஆடப்படும். முடிவடையும்போது ஒன்று, மூன்று, ஐந்து எண்ணிக்கைகளில் இது ததிங்கிணதோம் அல்லது கிடதகதரிகிடதொம் என்னும் அடவுகளில் முடிவடையும்

No comments:

Post a Comment