Showing posts with label நாட்டிய எண்ணக்கருக்கள். Show all posts
Showing posts with label நாட்டிய எண்ணக்கருக்கள். Show all posts

Thursday, July 28, 2011

நாட்டியக் கிரமம்

யதோ ஹஸ்த ஸ்ததோ த்ருஷ்டிஹி
யதோ த்ருஷ்டிஹி ஸ்ததோ மனக
யதோ மனக ஸ்ததோ பாவஹ
யதோ பாவஹ ஸ்ததோ ரஸஹ

கருத்து :

                 கைகள் அசையுமிடத்து கண்கள் சேர வேண்டும். கண்கள் சேருமிடத்து மனம் சேர வேண்டும். மனம் சேருமிடத்து பாவம் சேர வேண்டும். பாவம் சேருமிடத்து ரஸம் உண்டாக வேண்டும்.



ஆஸ்யே நாலம் பயே கீதம்
ஹஸ்தே நார்த்தம் ப்ரதர்ஷே
ஷக்ஷீர்ப்யாம் தஷே பாவ 
பாதப்யாம் தாளம் ஆதிஷே

கருத்து :

                 நாட்டியப் பெண் பாடத் தெரிந்தவளாக இருக்க வேண்டும். கருத்தைக் கைகளினால் வெளிப்படுத்த வேண்டும். இரு கண்களினாலும் பாவத்தை வெளிப்படுத்த வேண்டும். இரு கால்களினாலும் தாளப் பிரமாணத்தைக் காட்ட வேண்டும்.     



Wednesday, July 27, 2011

புஸ்பாஞ்சலி

விக்னானாம் நாஷனம் கர்தும் பூதானாம் ரக்ஷனாயச்ச
தேவானாம் துஷ்டயே சாபி ப்ரேக்ஷகானாம் விபூதையே
ஸ்ரஸசே நாயகஸ் யாத்ர பாத்ர சம்ரக்ஷ  நாயச்ச 
ஆச்சர்ய ஷிக்ஷா ஷிக்யர்தம் புஸ்பாஞ்சலி மதாரபேத்


கருத்து : 

    இடையூறுகளை அழிப்பதற்காகவும், உயிர்களைக் காப்பாற்றுவதற்க்காகவும், தேவர்களை மகிழ்விப்பதற்க்கும், பார்வையாளர்களுடைய செழிப்பிற்கும், நாட்டியக் குருவினுடைய தலைவரின் நன்மைக்கும், நடிகையின் பாதுகாப்பிற்கும், ஆசானுடைய கல்வி சித்திக்காகவும் மலர் தூவி அஞ்சலி செய்ய வேண்டும். 

அரங்க தேவஸ் துதி

பரத குல பாக்ய கலிகே 
பாவ ரஸானந்த பரினதாகரே 
ஜக தேக மோகன கலே
ஜய ஜய ரங்காதி தேவதே தேவி  
  

கருத்து : 
                  பரத குலத்திற்கு அதிஷ்டம் தருபவளே பாவம், ரஸம் ஆகியவற்றால் ஏற்படும்  ஆனந்தம் பரிணமித்த உருவம் உடையவளே உலகம் முழுவதும்  கவரத்தக்க ஒரேயொரு கலையாக இருப்பவளே வெற்றி வெற்றி அரங்கத்தின் தேவிக்கு.  

Monday, July 18, 2011

கோர்வை

         பல அடவுகளின் சேர்க்கை கோர்வை எனப்படும். நாட்டியத்தில் வெவ்வேறு அமைப்புக்களைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தாளத்தில் அமைய சீரான சொற்கட்டுக்களைக் கோர்வைகளைக் கொண்ட மாலை கோர்வை எனப்படும். இது அங்ககாரம் அல்லது தொடுக்கப்பட்ட மாலை என அழைக்கப்படும். மாலையான இந்த கோர்வையானது ஒழுங்குமுறையில் அழகாக தொடுக்கப்பட்டுள்ளது. மண்டலங்கள், முத்திரைகள், பாதபேதங்கள் இங்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. பாடலின் கதிக்கேற்ப இக்கோர்வை அமைக்கப்பட்டு படிப்படியாக துரித லயத்தில் முடிவடையலாம். இக்கோர்வைகள் வன்மையும், மென்மையும் ஆன ஹஸ்த, பாத அசைவுகள் கலந்த அல்லது மாறி மாறித் தொடுக்கப்படும் ஒரு சிறு தீர்மானத்தில் முத்தாயிக்கப்பட்டு ஆடப்படும். முடிவடையும்போது ஒன்று, மூன்று, ஐந்து எண்ணிக்கைகளில் இது ததிங்கிணதோம் அல்லது கிடதகதரிகிடதொம் என்னும் அடவுகளில் முடிவடையும்

Thursday, June 30, 2011

அடவு

            நடனத்தின் அடவு என்பது ஒரு சிறு ஆடல் துனுக்காகும். பல மண்டலங்களும், முத்திரைகளும் இணைந்து வருவது அடவு எனப்படும். இந்த ஆடல் துனுக்கானது ஒரு தாளத்தின் ஒரு காலடியையும், ஓர் உடல் நிலையையும், ஆடல் முத்திரைகள் கொண்ட கையசைவு ஒன்றையும் சேர்த்து பொருந்தியதாக இருக்கும். அதே போல ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்தை நடிகை ஆட்டத்தின் மூலம் அடைவதினால் , இதனை மொழி இலக்கணம் கற்ற சில அறிஞர்கள் இன்று அடைவு என்று திருத்தி எழுதி வருகின்றனர். இது "அடி" என்ற பொருள் கொண்ட ஆடு, அடுக்கு, அதுவு என்ற தெலுங்குச் சொற்களிலிருந்து வந்துள்ளது. 

            இவ்வாறு பல துணுக்குகள் கோர்வையைச் சேர்ந்தே ஒரு ஆடல் வரிசையாகும். பல ஆடல் வரிசையைக் கொண்டது குழு நடனமாகும். இந்த துணுக்குகளில் அடிகளைப் பயன்படுத்துவதில் பல வகைகள் காணப்படுகின்றன.அடிகளைத் தரை மீது சமமாய்த் தட்டுவது தட்டடவு  என்றும், கால நீட்டித் தட்டுவது நாட்டடவு என்றும், ஐந்து விரல் கொண்ட பதத்தின் முன் பகுதியை குதித்து மெட்டுவது மெட்டடைவு என்றும் அடிப்படையில் மூன்று வகைப்படும். இவைகளில் இரண்டு அடைவுகள் சேரும் போது தட்டுமெட்டு, மெட்டிநாட்டு, மெட்டித்தட்டு, நாட்டித்தட்டு, நாட்டிமெட்டுஎன ஆறு அடைவுப் பிரிவுகள் உண்டு. இதனைவிட மண்டியடவு, சறுக்கல் அடவு, கத்தரி அடவு, கிடதக தரிகிட தொம், ததின்கினதொம் முதலியனவும் அடங்கும். 

Wednesday, June 29, 2011

நமஸ்காரம்

            பாரத தேசத்தில் தோற்றம் பெற்றதும், மிகவும் புனிதமானதுமான நாட்டியக்கலை என்று மக்கள் மனதில் தெய்வீக கலை என்ற அந்தஸ்தைப் பெற்றதோ அன்றே தட்டிக் கும்பிடும் வழக்கமும் ஆரம்பமாயிற்று. அதாவது தட்டிக்கும்பிடுதல் என்ற வழக்கம் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். இத்தட்டிக்கும்பிடும் செயல் நமஸ்காரம் எனவும் கூறப்படும். இந்நமஸ்காரம்   இரு வகைப்படும்.சின்ன நமஸ்காரம் , பெரிய நமஸ்காரம். பொதுவாக நாட்டியப் பயிற்சியின் பொது செய்யப்படும் நமஸ்காரம் சின்ன நமஸ்காரம் ஆகும். நாட்டியக் கச்சேரியின் பொது இவ்விரு நமஸ்காரமும் செய்யப்படும்.

           இந் நமஸ்காரத்தினை நடனமாடும் ஒருவர் நடனமாடுவதற்கு முன்னரும் நடனமாடிய பின்னரும் செய்தல் வேண்டும். நமஸ்காரத்தின் போது  பூமாதேவியை வழிபடுவதாகக் கூறப்படும். இந் நமஸ்காரத்தின் போது கடஹாமுகம், சிகரம், சதுரம் என்னும் ஒற்றைக்கை முத்திரைகள் மூன்றும், அஞ்சலி எனப்படும் இரட்டைக்கை முத்திரை ஒன்றும் மொத்தம் நான்கு முத்திரைகள் பிரயோகிக்கப்படுகின்றன. 

          நமஸ்காரத்தின் போது முதலில் சமநிலையில் நின்றவாறு, கைகளை மார்பின் முன்பு கடஹாமுக முத்திரையில் வைத்துக் கால்களால் வலது, இடது என்ற ஒழுங்கில் பூமியில் இருதடவை தட்ட வேண்டும். பின் இரு கைகளிலும் சிகர ஹஸ்தத்தை நீட்டிச் சுற்ற வேண்டும். பின் முழுமண்டியில் அமர்ந்து கைகளில் சதுர முத்திரை பிடித்து பூமியைத் தொட்டு கண்ணில் ஒற்றி அஞ்சலி ஹஸ்தத்தினால் வழிபடுதல் வேண்டும்.

நமஸ்காரத்தின் உட்பொருள்
       
           அன்னை பூமாதேவியிடம் அவள் மீது மிதித்து தட்டுவதற்கு மன்னிப்பு வேண்டுவது அதன் பொருள். அஞ்சலி கையை தலைக்கு மேல் உயர்த்தி கடவுளுக்கும், புருவமத்தியிலிருந்து குருவுக்கும், மார்புக்கு எதிரிலிருந்து சபையினருக்கும் அஞ்சலி செலுத்துவது மரபு. இவை தவிர வகுப்பில் கட்டிக் குச்சியையும் மேடையில் கைத்தாலத்தையும் தொட்டு வணங்குவதற்கும் உட்பொருள் உண்டு. அண்டசராசரமும் இயங்கிவருவது ஒரு சீரிய தாள அளவின் அடிப்படையில்தான். சூரிய உதயமும் , அஸ்தமனமும் ஒரு கால அளவைக் கொண்டு தானே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தாளம் என்பது காலத்தையும் அதன் பிரிவுகளையும்தான் குறிக்கும். இவ்வகிலாண்ட வலயத்தோடு ஆடுபவலும் மனம் ஒருமித்து சற்று தியானித்து கைத்தாளத்திற்கு வணக்கம் செலுத்த வேண்டும். தாளக் கருவியாகிய மிருதங்கத்திர்க்கும் வணக்கம் செலுத்தல் மரபு. நாம் அன்றாடம் ஈடுபடும் செயல்கள் யாவுமே பரம்பொருளுக்கு செலுத்தும் வணக்கம் அவ்வழியில் செய்யும் தொழிலே தெய்வம் என்றுணர்ந்து கருத்தொருமித்து செயல்படுவதே தட்டிக் கும்பிடுவதன் உட்கருத்து.